பருவத்திரு மலரே – 40

(Tamil New Sex Stories - Paruvathiru Malarae 40)

Raja 2014-08-03 Comments

This story is part of a series:

மாலைவரை…சுமூகமாகத்தான் இருந்தது.
ஆனால் அதன் பிறகு ஒரு பிரச்சினை கிளம்பியது..!

இரவு… அவர்கள் எங்கே..தங்குவது என்கிற பிரச்சினை.!!

பரத்தின் அக்கா… அவனது வீட்டில்தான் பையனும்.. பொண்ணும் தங்க வேண்டும் என்று பிடிவாதமாக நிற்க….
பாக்யா வீட்டினர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
அந்தப் பிரச்சினை நீண்ட நேரம் நடந்து கொண்டிருந்தது.
ஆளாலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க… அதுவரை அமைதியாக இருந்த பாக்யா… வெளியே போய்… அத்தனை பேர் முன்பாகவும் நின்று…
”யாரும் சண்டை போட வேண்டாம்…நாங்க.. அங்கயே போய் தங்கிக்கிறோம்..” என்று சொல்ல….

ராசு உட்பட… அவளது உறவினர்கள் அத்தனை பேரும் வாயடைத்துப் போனார்கள்.
அவளைத் திட்ட வந்தவர்களையும் அடக்கினான் ராசு. .!
”வாழப் போறவ.. அவ..! அவளே இப்படி சொன்னப்பறம்…இனி நாமெல்லாம் பேசறதுல.. அர்த்தமே இல்ல… விட்றுங்க..!”

அதன் பிறகு… அவளது வீட்டுச் சூழ்நிலையே மாறிப்போனது..!
அதுவரை கலகலப்பாக இருந்த வீடு… அமைதியாகிப் போனது..!

பரத்தின் அக்கா.. அவர்களைப் புறப்படச்சொல்ல.. இருவரும் போய்… புறப்படத்தயாராக…
அவளது சொந்தங்கள் எல்லாம் கிளம்பத் தொடங்கினர்..!!

” உங்க சொந்தக்காரங்க எல்லாம் கோவிச்சுட்டு போறாங்க போலருக்கு..?” என்றான் பரத்.
” போனா போயிட்டு போறாங்க..! அதுக்கென்ன பண்ண முடியும்…?” என்றாள் அவள்.

கோமளாவின் குடும்பம் தவிற.. மற்ற அனைவருமே கிளம்பினர்.
அவளது அப்பாவும்…அம்மாவும்… அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்புவது கேட்டது.
ராசுவின் அம்மாவைத் தவிற..வேறு யாரும் வந்து… அவளிடம் சொல்லிக்கொள்ளவில்லை.

அவள் புறப்பட்டு வீட்டுக்குள் நின்றிருந்த போதுதான் தெரிந்தது ராசுவும் கிளம்புகிறான் என்று..!!

அதுவரை இயல்பாக இருந்த அவளது மனதில்.. சட்டென ஒரு கலவரம் உருவானது.

அம்மா சொல்லிக்கொண்டிருந்தாள்..!
” எல்லாருமே போய்ட்டாங்க நீயாவது இரு தம்பி..!”
”இல்லக்கா..! கோவிச்சுக்காத..!” ராசு.
அவளது அப்பா ”நீ போகக்கூடாது ராசு..! இன்னிக்கு ஒரு நாள் இருந்துட்டு போ..! உனக்கு என்ன வேனுமோ..எல்லாம் நா வாங்கித்தரேன்..!” என்றார்.
”சே.. சே..! அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மச்சா..! போயி.. இனி வேலைய பாக்கலாம்…!” என்றான் ராசு.

அம்மா…” அவ சொல்லிட்டான்னெல்லாம் கோவிச்சுட்டு போறியே தம்பி.. அவளப் பத்தி உனக்கே தெரியுமே..! அவள விட்று.. நீ..எங்களுக்காக இரு..!”
” சே.. சே..! அதுக்காகெல்லாம் இல்லக்கா..! நீ அப்படி எதும் நெனச்சுக்காத…” ராசு.

மறுபடி அப்பா ” இதபார் ராசு.. நீ சொன்னேங்கற.. ஒரே காரணத்துக்காகத்தான்.. இத்தனை கடன் பட்டு… எல்லாரையும் கூப்பிட்டு வெச்சு… நல்லபடியா இந்த கல்யாணத்த நடத்தி வெச்சோம்..! இல்லேன்னா..ஊர்க்காரரே என்னமோ பண்ணிட்டு போகட்டும்னு விட்றுப்போம்..! இப்ப இத்தனை ஏற்பாடு பண்ணதெல்லாம் நாம…! ஆனா அவன் எங்களுக்கு பையனே இல்லேன்னெல்லாம் சொன்னவங்க… இப்ப வந்து கூப்பிட்டதும்… அவங்க கூட போறதுக்கு நிக்கறா.. இப்பவே பெத்தவங்கள மதிக்காத.. இது எங்க நல்லா வாழப் போகுது..?
அவ எப்படியோ போய்ட்டு போறா… இனி அவளாச்சு… அவ புருசனாச்சு..! ஆனா அவ பேசிட்டானு… நீ போறதெல்லாம் எனக்கு சுத்தமாவே புடிக்கல…”
” என்ன மச்சா…நீங்க மறுபடி…மறுபடி…”

அவளது அம்மா இறுதியாக ஒன்று சொன்னாள்.
”இதபாரு தம்பி… நீ இருந்தா.. நாளைக்கு அவளைப் போய் மறு அழைப்புக்கு கூட்டிட்டு வருவோம்.. நீ போய்ட்டா.. இதோட கடைசி..! நீயே முடிவு பண்ணிக்க…!!”
ராசு ”என்னை மன்னிச்சுருக்கா… இதுக்கு மேல என்னால இருக்க முடியாது.. நா கெளம்பறேன்..” என்க…

அதைக்கேட்டுக்கொண்டிருந்த பாக்யாவின் கண்களில் மளமளவென கண்ணீர் வழிந்தது.. மடை திறந்த வெள்ளம் போல…அவளின் கண்களிலிருந்து கண்ணீர் அருவி… வழிய…
பரத் அவள் தோளைத் தொட்டான். ”ஏய்….”

அவளால் தாங்க முடியவில்லை. சட்டென விம்மல் வெடித்தது. அப்படியே மடங்கி உட்கார்ந்து.. முழங்கால்களுக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டு கேவினாள்.
அவள் பக்கத்தில் உட்கார்ந்து.. அவளது தோளைத் தொட்ட பரத்தின் கையைத் தட்டிவிட்டாள்.

என்றுமில்லாத அளவு.. குமுறிக் குமுறி.. அழுதாள்.
பரத் மறுபடி தோள் தொட..மறுபடி… அவன் கையைத் தட்டிவிட்டாள்..!

சில நொடிகள்… அங்கேயே நின்றிருந்த பரத் எழுந்து வெளியே போனான்.

நேராக ராசுவிடம் போய்…
” பாக்யா அழுதுட்டிருக்கா.. போய் சமாதானப் படுத்திட்டு போங்க..” என்றான் பரத்.
ராசு ” ஏன். ..?”
”நீங்களும் போறீங்கன்னு அழறா…”
” அவ அழறானு.. ரொம்ப வருத்தப்படாத…. இன்னிக்கு ஒரு நாள்தான் அவ அழுவா.. இனிமே.. காலத்துக்கும் நீதான் அழவேண்டியிருக்கும்..” என்றவன்…. வெளியிலிருந்தே..

” குட்டிமா போய்ட்டு… வரேன்டா…” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டான்.

அவன் போன பின்பும்… நீண்ட நேரம் அழுதாள் பாக்யா..!!
அப்பறம்….
நிமிர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டு… பரத்திடம் கேட்டாள்.
”போலாமா…?”
அவன் ” ம்…” சொல்ல….

அவனுடன் கிளம்பி வெளியே போனாள்…!
அவளது.. அம்மா. .. அப்பா… பெரியம்மா… பெரியப்பா… கோமளா… என எல்லோரும் பந்தலின் கீழே உட்கார்ந்திருக்க.
… பொதுவாக…
” நான் போய்ட்டு வரேன்…” என்றாள்.

யாருமே பதில் பேசவில்லை.
கோமளா மட்டும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பரத்தின் கையைப் பிடித்து…
”நட போலாம்…” என்க…

அவனும் பொதுவாக…
”நாங்க போய்ட்டு வரோம்..” என்றான்.

பாக்யாவின் அப்பா…
”பாத்து போங்க…!!” என்று மட்டும் சொல்ல….
தன் புதுக்கணவனுடன் நடந்தாள் பாக்யா….!!!!

{ முதல் தொகுதி… முடிந்தது }

வணக்கம் நண்பர்களே…!!
இந்தக் கதை… 75 % மேற்பட்டவை உண்மைச் சம்பவங்களே…!! கதைக்கோர்வைக்காக மட்டுமே.. என் கற்பனையை பயண்படுத்தியிருக்கிறேன்..!!
மற்றபடி… இதில் வரும் நிகழ்வுகள்…{ பெரும்பாலான வார்த்தைகள் உட்பட..} எல்லாம் பொய்க்கலப்பற்றவையே…!!
கதாபாத்திரங்கள்… ஒருவர்கூட… கற்பனை பாத்திரம் அல்ல… அனைவரும் உண்மையானவர்களே…!!
இந்தக் கதையை இரண்டு தொகுதிகளாகத்தான் கொடுக்க நினைத்திருந்தேன்…!!
ஆனால் இது ஒரு உண்மைக்கதை என்பதால்… இதற்கு மேல் தொடர்வது… இப்போதைக்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது…!!
இருப்பினும்…இன்னொரு சந்தர்ப்பத்தில்… நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்த்து… அடுத்த தொகுதியைச் சொல்கிறேன்…..!!!!

மற்றபடி… இந்தக் கதை பற்றின… உங்கள்… உணர்வுகள்… அபிப்ராயங்கள்… கருத்துக்கள்… எதையும் மறைக்காமல்… திறந்த மனதுடன் சொல்லுங்கள்…!!
அது எனது மற்ற கதைகளுக்கு… உதவியாக இருக்கும்…!!!! Akka Koothi Tamil New Sex Stories

— நன்றி…..!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top