ஆண்மை தவறேல் – 24

(Sex Stories In Tamil - Aanmai Thavarael 24)

Raja 2013-12-06 Comments

“இவதான் அசோக்.. என் வொய்ப் புனிதா..!!” புருஷோத்தமன் அறிமுகம் செய்து வைக்க, அசோக்கும் தடுமாற்றமாய் புனிதாவுக்கு வணக்கம் சொன்னான்.

“சரி.. வா.. உள்ள போகலாம்..” சொன்ன புருஷோத்தமன் புனிதாவை கைகளில் தூக்கிக்கொள்ள முயன்றான்.

“ஐயோ.. விடுங்க.. நான் நடந்து வர்றேன்..” என்றாள் புனிதா வெட்கத்துடன்.

“பரவால்லம்மா.. வா.. நான் தூக்கிட்டு போறேன்..!!”

புருஷோத்தமன் புனிதாவை தனது கைகளில் அள்ளிக்கொண்டான். புனிதா அவனது கழுத்தை சுற்றி தனது கைகள் இரண்டையும் மாலையாக கோர்த்துக் கொண்டாள். மனைவியை ஏந்திக்கொண்ட புருஷோத்தமன் அசோக்கிடம் திரும்பி சொன்னான்.

“பங்க்ஷன் ஒரு அரை மணி நேரந்தான் அசோக்.. அப்புறம் டின்னரும் ஏற்பாடு பண்ணிருக்காங்க.. நீ இருந்து.. பங்க்ஷன் முடிஞ்சதும் எங்க கூட டின்னர் சாப்பிட்டுதான் கெளம்பனும்..”

“ஆமாண்ணா.. வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்..” புருஷனோடு சேர்ந்து புனிதாவும் அசோக்கிடம் கெஞ்சும் குரலில் சொல்ல,

“ம்ம்.. ஓகே.. இ..இருக்குறேன்..!!” அதிர்ச்சி முழுதும் விலகாதவனாகவே அசோக் சொன்னான்.

அப்புறம் புருஷோத்தமனின் பாராட்டு விழா முடிந்து, அவர்களுடன் அமர்ந்து ஒன்றாக டின்னர் சாப்பிட்டுவிட்டே அசோக் கிளம்பினான். ஹோட்டலில் இருந்து அவன் கிளம்பியபோது இரவு ஒன்பதரை ஆகிவிட்டது. புருஷோத்தமனும், புனிதாவும் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து விலகாமலே, அசோக் ஈஞ்சம்பாக்கம் நோக்கி காரை செலுத்திக் கொண்டிருந்தான். அவனுடைய மனதில் என்னென்று புரியாத ஒருவகை குழப்பம்..!! ஸ்டியரிங் பிடித்திருந்தவன் அவ்வப்போது தன் தலையை திருப்பி, தனக்கு பக்கத்து சீட்டில் இருந்த அந்த பொருளை பார்த்துக் கொண்டான்.

பாராட்டு விழாவில் இறுதியில் புருஷோத்தமன் பேசிய வார்த்தைகள் அசோக்கின் காதுகளில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன.

“இன்னைக்கு என் திறமைக்கு கிடைச்சிருக்குற இவ்வளவு பெரிய அங்கீகாரம்.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ரொம்ப பெருமையா இருக்கு..!! உங்க எல்லாருக்கும் ஒரு விஷயம் சொல்லணும்.. என்னோட ஒவ்வொரு ஓவியங்களுக்கும் பின்னாடி.. ஒரு உயிருள்ள ஓவியத்தோட விலை மதிப்பில்லாத தியாகம் ஒளிஞ்சிருக்கு.. அந்த ஓவியம் என் மனைவி புனிதாதான்..!! என்னோட எல்லா வெற்றிக்கும் காரணம் என் மனைவிதான்.. அவ இல்லைன்னா.. இன்னைக்கு நான் இங்க உங்க முன்னாடி இல்ல..!! ஐ’ஆம் வெரி வெரி ப்ரவுட் ஆஃப் மை வொய்ஃப்..!! அவ எனக்கு கெடைச்சதுக்கு நான் ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்..!! தேங்க்ஸ் புனிதா.. தேங்க்ஸ் ஃபார் கமிங் இன் மை லைஃப்..!!”

‘இப்படி ஒரு மனிதன் மாறிப் போவானா..?? இவன் சொன்ன வார்த்தைகளை வேதவாக்காக எடுத்துக் கொண்டு நான் என் வாழ்க்கை பாதையை நிர்ணயித்திருக்கிறேன்..!! இவன் என்னடாவென்றால்..?? இது எப்படி சாத்தியம்..??’ குழம்பிய அசோக் மீண்டும் விழிகளை சுழற்றி, பக்கத்து இருக்கையில் இருந்த அந்த பொருள் மீது பார்வையை வீசினான்.

இப்போது அசோக்கிற்கு வேறு சில வார்த்தைகள் காதில் ஒலித்தன. அவர்களோடு அமர்ந்து அவன் டின்னர் சாப்பிடும்போது, அந்த புனிதா வெள்ளந்தியாக அசோக்கிடம் சொன்ன வார்த்தைகள்.

“இவரு எல்லாம் ரொம்ப ஓவரா சொல்றாருண்ணா.. நான் என்ன அப்படி பெருசா பண்ணிட்டேன்..?? ஏதோ கொஞ்சம் ஆறுதலா பேசுவேன்.. பசில இருக்குறப்போ சாப்பாடு போடுவேன்.. அவரோட மைண்டை டைவர்ட் பண்ண ட்ரை பண்ணுனேன்.. அவ்ளோதான்..!! அவருக்கே மாறணும்னு ஆசை இருந்திருக்கு.. அதான் சீக்கிரமே அந்த ஸ்டேஜ்ல இருந்து வெளில வந்துட்டாரு..!! அப்புறந்தான் எனக்கும் ரொம்ப நிம்மதியா இருந்தது..!! ஆனா.. இவரு அதுக்கப்புறமும் என்னை கொஞ்ச நாள் காய விட்டாரு பாருங்க.. ஹாஹா.. என்னால மறக்கவே முடியாது.. இவருக்கு ரொம்பத்தான் கொழுப்பு..!! மனசுல இருக்குறதை எங்கிட்ட சொல்லவே இல்லண்ணா.. நல்லா சிரிச்சு பேசுவாரு.. பிரியமா நடந்துப்பாரு.. ஆனா என் மேல இருக்குற லவ்வை சொல்லவே இல்ல.. எனக்கு ஒரே கொழப்பமா இருக்கும்.. நானா சொல்றதுக்கும் எனக்கு தயக்கம்.. ஏற்கனவே சொன்னப்போதான் அறைஞ்சிட்டாரே..? இவரே ‘ஐ லவ் யூ..’ சொல்லிட மாட்டாரான்னு ஏங்குவேன்..!! ஆனா.. இவரு மொத மொதல்லா இவரோட காதலை எங்கிட்ட எப்போ சொன்னாரு தெரியுமா..?? எனக்கு ஆக்சிடன்ட்ல ரெண்டு காலும் போய்.. ஹாஸ்பிட்டல்ல படுத்து கெடக்குறப்போ.. அழுதுட்டே சொல்றாரு.. ‘ஐ லவ் யூ’ன்னு..!! யாருண்ணா சொல்வாங்க அப்படி..?? இவங்க வீட்டுல கூட கொஞ்சம் யோசிச்சாங்க.. ஏன்.. நான் கூட வேணாம்னு அழுது புரண்டு ஒரு வழி பண்ணுனேன்..!! ஆனா.. இவர் யார் பேச்சையும் கேட்காம, ஒத்தைக்கால்ல நின்னு.. ரெண்டு காலும் இல்லாத என் கழுத்துல தாலி கட்டுனாரு..!! யாருண்ணா செய்வாங்க அப்படி..?? நான்தாண்ணா இவர் கெடைக்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்..!!”

புருஷோத்தமனும், புனிதாவும் உதிர்த்த வார்த்தைகள் திரும்ப திரும்ப அசோக்கின் நினைவுக்கு வந்து போயின. அவனது மூளையில் பலவித குழப்ப அதிர்வுகளை ஏற்படுத்தி சென்றன. திருவான்மியூரில் சிக்னலுக்காக காரை நிறுத்தி காத்திருந்த போது, அசோக் மீண்டும் தன் தலையை திருப்பி பக்கத்து இருக்கையை பார்த்தான்.

பக்கத்து இருக்கையில் கவர் பிரிக்கப்பட்டு அந்த ஓவியம் இருந்தது..!! சற்றுமுன் புருஷோத்தமன் அசோக்குக்கு பரிசாக அளித்த அவனே வரைந்த ஓவியம்..!! புதுமணப்பெண் ஒருத்தி, உடலெங்கும் ஜொலிக்கும் நகைகளுடன், தலையில் சூடிய மல்லிகையுடன், புகுந்த வீட்டில் விளக்கேற்றுவது மாதிரியான ஓவியம் அது..!! விளக்கில் இருந்து கிளம்பிய வெளிச்சத்தை விட, அந்தப்பெண்ணின் முகத்திலும் சிரிப்பிலும் இருந்து கிளம்பிய வெளிச்சம், அந்த வீட்டையே ஒளிமயமாக்கிக் கொண்டிருக்க, பின்னணியில் இருந்த குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டிருந்தனர்..!!

அந்த ஓவியத்தை பார்க்க பார்க்க, அசோக்கின் மனதுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு.. காரணம் தெரியாத குழப்பம்..!! ஓவியத்தில் இருந்த பெண்ணின் முகம் பட்டென்று மாறி.. அந்த இடத்தில் நந்தினியின் முகம் தோன்ற.. தோன்றியதும் அசோக்கை பார்த்து விஷமமாக புன்னகைக்க.. அசோக் உடனடியாய் தன் பார்வையை அந்த ஓவியத்தில் இருந்து விலக்கிக் கொண்டான்..!!

அத்தியாயம் 19

அதன் பிறகு ஒரு வாரம் கழித்து..!! அது ஒரு நண்பகல் நேரம். இடம் அசோக்கின் அடையாறு ஆபீஸ்..!!

அசோக்கிற்கு எதிரே நந்தினி அமர்ந்திருந்தாள். தான் சமைத்து எடுத்து வைத்திருந்த மதிய உணவு ஐட்டங்களை, ஹாட் பாக்ஸ் திறந்து, டேபிள் மீது அடுக்கிக் கொண்டிருந்தாள். பசியில் இருந்த அசோக், நாவில் எச்சில் ஊற மனைவியிடம் கேட்டான்.

“இன்னைக்கு என்ன சமையல் நந்தினி..??”

“சாம்பார், ரசம், அப்பளம், பாவக்கா பொரியல்..!!”

“பாவக்காயா..??” அசோக் முகத்தை சுளித்தான்.

“என்னாச்சு.. மூஞ்சி ஏன் அப்படி போகுது..??”

“பாவக்கா எனக்கு பிடிக்காதே..”

“ஏன்..??”

“கசக்கும் நந்தினி..”

“நல்ல விஷயம் எல்லாம் கொஞ்சம் கசப்பாத்தான் இருக்கும்.. கசப்பு புடிக்காதுன்னா, நல்லதும் எதுவும் புடிக்காதுன்னு அர்த்தம்..!!”

“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. இப்போலாம் நீ எது பேசினாலும்.. பொடி வச்சே பேச ஆரம்பிச்சுட்ட..!! பாவக்கா கசக்கும்னு சொன்னதுக்கு.. இப்படி ஒரு பாடாவதி தத்துவம் தேவைதானா..?”

“ச்சே.. அப்டிலாம் ஒன்னும் இல்லைங்க.. கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. பாவக்கா கசப்பா இருந்தா என்ன.. அது உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா..? பசியை தூண்டும்.. பித்தத்தை குறைக்கும்.. வயித்துல இருக்குற பூச்சிலாம் சாகடிக்கும்.. கல்லீரலுக்கு ரொம்ப நல்லது..”

“அடச்சை.. போதும் நிறுத்து..!! வாய்க்கு ருசியா ஆக்கி போடுடின்னா.. வலம்புரி ஜான் மாதிரி அட்வைஸ் பண்ணிக்கிட்டு..??” அசோக் சலிப்பாக சொல்ல, நந்தினிக்கு சிரிப்பு வந்தது.

“ஹாஹாஹாஹா..”

“சிரிக்காத.. எடுத்து வை.. சாப்பிட்டு தொலைக்கிறேன்..”

அசோக் சட்டையின் கையை மடித்து விட்டுக்கொண்டே சொன்னான். நந்தினி கூடையில் இருந்த ப்ளேட்டை எடுத்து அசோக் முன்பு வைத்தாள். சாதத்தை கொட்டி, சாம்பாரை அள்ளி ஊற்றினாள். பொரியலை ஒரு கரண்டியில் எடுத்து வைத்தாள். அசோக் சாதத்தை பிசைவதற்காக கையை கொண்டு சென்றபோதுதான், அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. உடனே அசோக் தலையை நிமிர்த்தி வாசலை பார்த்தான். வாசலில் கற்பகம் கையில் ஒரு பேப்பருடன் நின்று கொண்டிருந்தாள். அசோக் சாப்பிட தயாராகி கொண்டிருப்பதை பார்த்ததும், தவறான நேரத்தில் வந்துவிட்டோமோ என்று இப்போது தயங்கினாள்.

“ஓ.. ஸாரிடா.. சாப்பிட்டுக்கிட்டு இருக்கியா..??”

“இன்னும் சாப்பிட ஆரம்பிக்கலை கற்பு.. இனிமேதான்.. சொல்லு..”

“இல்ல.. நீ சாப்பிடு.. நான் அப்புறம் வர்றேன்..”

“பரவால.. சொல்லு.. என்ன விஷயம்..?”

“இ..இது.. அந்த புனே பார்ட்டிக்கு இதை ஃபேக்ஸ் அனுப்பனும்.. நீ ஒருதடவை பாத்து ஓகே சொல்லிட்டா.. அனுப்பிடலாம்..!!”

“சரி கொண்டா.. பாக்குறேன்..”

Comments

Scroll To Top