மாங்கல்யம் தந்துனானே – 18

(Tamil Hot Sex Stories - Mangalyam Thanthunanae 18)

Raja 2014-04-24 Comments

“எவளால..?”

“அவதான்.. இப்போ கால் பண்ணினாளே.. ஷர்மிலி..!! கெளம்பிட்டீங்களா இல்லையான்னு கேக்குறதுக்குத்தான இப்போ கால் பண்ணினா..?”

“என்னாச்சுடி உனக்கு..? ஏன் இப்படி எல்லாம் பேசுற..? நான் ஆபீஸ் வேலையா புனே போறேண்டி..!!”

“ஓஹோ..? ஆபீஸ் வேலையா போறீங்களா..? அவகூடத்தான் எதோ வேலையா போறீங்களோன்னு நான் நெனச்சுட்டேன்..!!” நான் கிண்டலாக சொல்ல, அவர் பொறுமை இழந்தார். பற்களை கடித்துக்கொண்டு கத்தினார்.

“அறைஞ்சு பல்லை உடைச்சிடுவேன் பவி.. உன் இஷ்டப்படி வாயில வந்ததுலாம் பேசாத..”

“கோவம் வருதுல..? இந்த மாதிரி நான் சந்தேகப்பட எவ்வளவு நேரம் ஆகும்..? நீங்க எங்கிட்ட பொய் சொல்லி திருட்டுத்தனமா அவ கூட பேசுனா.. இப்படித்தான் சந்தேகப்படத் தோணும்..!! இப்போ சொல்லுங்க.. யார் மேல தப்பு..?”

“யார் மேல தப்புன்லாம் எனக்கு தெளிவா தெரியலை..!! ஆனா.. நீ என்ன பேசுறோம்னே தெரியாம.. பைத்தியம் மாதிரி உளர்ற.. அது மட்டும் தெளிவா தெரியுது..!!”

“ஓ.. நான் பைத்தியமா..? ஆமாம்… பைத்தியந்தான்..!! ஒவ்வொரு செகண்டும் உங்களை பத்தியே நெனச்சுக்கிட்டு.. உங்களுக்காகவே வாழ்றேன்ல..? நான் பைத்தியந்தான்..!!” நான் அந்த மாதிரி பரிதாபமாக சொல்ல, அவர் சற்று இளகினார்.

“ப்ச்.. பவி…!! நீ என் மேல எக்கச்சக்கமா லவ் வச்சிருக்க.. அது எனக்கு புரியாம இல்ல..” சொல்லிக்கொண்டே அவர் அன்பாக என் புஜத்தை பற்ற, நான் பற்றிய கையை உதறினேன்.

“விடுங்க..!! என்னைப் பத்தி உங்களுக்கு புரியுது.. ஆனா உங்களைப் பத்தித்தான் எனக்கு எதுவும் புரியலை..!!”

“என்ன புரியலை..?”

“என் மேல எவ்ளோ ப்ரியம் வச்சிருக்கீங்கன்னு..”

“என்ன பேசுற நீ..? நானும் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் பவி..” அவர் எரிச்சலாக சொன்னார்.

“உங்களால நிரூபிக்க முடியுமா..?”

“ப்ச்.. லவ்ன்றது ப்ரூவ் பண்ற விஷயமா..? ஃபீல் பண்ற விஷயம்..!!”

“நான் ஃபீல் பண்றது சரியா தப்பான்னு எனக்கே புரியலை.. அதான் ப்ரூவ் பண்ண சொல்லி கேக்குறேன்..!!”

“சரி.. என்ன பண்ணனும்னு சொல்லு..? என்ன செஞ்சு என் லவ்வை ப்ரூவ் பண்ணனும்..?”

“எனக்கு அந்த ஷர்மிலியை புடிக்கலை.. இனிமே அவகூட நீங்க பேசக் கூடாது..!! முடியுமா..?”

“ப்ச்.. என் லவ்வுக்கும்.. அவகூட பேசாம இருக்குறதுக்கும் என்ன சம்பந்தம்..?”

“என்னைப் பொறுத்தவரை சம்பந்தம் இருக்கு.. முடியுமா முடியாதான்னு சொல்லுங்க..!!”

“இங்க பாரு பவி.. நான் உன்னை லவ் பண்றேன்.. அதுக்காக நீ என்ன சொன்னாலும் என்னால மாடு மாதிரி தலையாட்ட முடியாது..!!”

“ஓ..!! அப்போ உங்களால அவகூட பேசாம இருக்க முடியாது.. அப்டித்தான..? என்னை விட அவதான் உங்களுக்கு முக்கியம்.. அப்டித்தான..?”

“அறிவில்லாம பேசாத பவி.. அவ என் க்ளோஸ் ஃப்ரண்ட்.. அவகூட எப்படி நான் பேசாம இருக்க முடியும்..?”

“ஏன் முடியாது..? என்னால முடியும்..!! உங்களுக்கு புடிக்கலைன்னா.. எந்த ஆம்பளை கூடவும் பேசாம இருக்க.. என்னால முடியும்..!! முடியும் என்ன.. அல்ரெடி அந்த மாதிரிதான் இருக்குறேன்.. தேவையில்லாம எந்த ஆம்பளை கூடவும் பேசாம..!!”

“உன்னை யார் அப்படி இருக்க சொன்னாங்க..? எனக்கு அவ கூட பேசுறது புடிச்சிருக்கு.. பேசுறேன்.. அதுமாதிரி உனக்கும் யார் கூடவாது பேச புடிச்சிருந்தா.. பேசிக்கோ போ..!!”

“ஓஹோ..?? இன்னைக்கு அவ கூட பேசுறேன்.. நீயும் யார்கூடவாவது பேசிக்கோன்னு சொல்வீங்க.. நாளைக்கு அவ கூட வேறொன்னு பண்ணப் போறேன்.. நீயும் யார்கூடவாவது பண்ணிக்கோன்னு சொல்வீங்களா..?”

நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவர் தன் புறங்கையை வீசி ‘பளார்ர்ர்….!!!!’ என என் கன்னத்தில் ஒரு அறை விட்டார். பொறி கலங்கிப் போனேன் நான்..!! பொத்தென சோபாவில் சுருண்டு விழுந்தேன். கொள்ளிக்கட்டையால் கோடு கிழித்த மாதிரி, என் வலது கன்னம் திகுதிகுவென எரிந்தது. எனது கட்டுப்பாடு இன்றியே, கண்களில் இருந்து பொலபொலவென நீர் கொட்ட ஆரம்பித்தது. ஒரு கையால் கன்னத்தை அழுத்திப் பற்றிக் கொண்டேன். அவர் தன் முகத்தை எனக்கு நெருக்கமாக கொண்டு வந்து, வெறுப்பாக கத்தினார்.

“இங்க பாரு.. நான் உன்னை லவ் பண்றேன்.. உனக்கு ஒரு நல்ல புருஷனா இருக்கணும்னு என் மனசார நெனைக்கிறேன்..!! அது என் மனசாட்சிக்கு தெரியும்.. அது போதும் எனக்கு..!! உனக்கு புடிச்ச மாதிரிலாம் அதை ப்ரூவ் பண்ணிக்கிட்டு இருக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை..!! நான் அவ கூட எந்த தப்பான எண்ணத்தோடவும் பழகலை.. நீ அறிவில்லாம கத்துறதுக்காகலாம் என்னால அவகூட பேசாம இருக்க முடியாது..!! புரிஞ்சதா..?”

சொன்னவர், நான் தயாராக எடுத்து வைத்திருந்த பேகை தூக்கி, அவருடைய பின்பக்கமாக மாட்டிக் கொண்டார். சேர் இழுத்துப் போட்டு ஷூ அணிந்து கொண்டார். நான் அசையாமல் அப்படியே அழுதுகொண்டே கிடந்தேன். ஷூ அணிந்ததும், லேப்டாப் பேகையும் எடுத்து தோளில் மாட்டிக் கொண்டார். கதவை நெருங்கியவர், அப்படியே திரும்பி என்னை பார்த்து சொன்னார்.

“நீ இப்டிலாம் பேசுவேன்னு சத்தியமா நான் நெனச்சே பாக்கலை பவி..!! இன்னும் மூணு நாள் தனியாத்தான இருக்கப் போற..? நான் போனப்புறம் நிதானமா யோசி.. நீ பேசுனதுலாம் கரெக்டான்னு யோசி..!!”

சொல்லிவிட்டு, அவர் கதவை அறைந்து சாத்தி வெளியேறினார். மூன்று நாட்கள் நிதானமாக யோசி என்று அவர் சொன்னதை, அடுத்த நொடியே நான் யோசிக்க ஆரம்பித்தேன். சற்று பொறுமையாக யோசிக்க ஆரம்பித்ததுமே, நான் பேசிய பேச்சில் இருந்த தவறு எனக்கு புரிந்தது. அதிலும் இறுதியாக என் வாயில் இருந்து வந்து விழுந்த அந்த வார்த்தைகள்.. நான்தான் அவ்வாறெல்லாம் பேசினேனா என நம்ப முடியாத மாதிரி இருந்தது. ஏன் அப்படி எல்லாம் பேசினேன் என என் மீதே எனக்கு கோபம் வந்தது.

ஆனால், அதே நேரம் அவர் மீது எந்த தவறும் இல்லை எனவும், என் மனம் ஒத்துக் கொள்ள மறுத்தது. என்னைப் பற்றி நன்றாக புரிந்து வைத்திருப்பவரானால், அந்த மாதிரி பொய் சொல்லியிருக்க மாட்டார் என்று நினைத்தேன். அவர் சொன்ன பொய்யால் என் மனம் எப்படி துடித்துப் போகும் என்று அவர் உணரவில்லையே என வருந்தினேன். இந்த மாதிரி எண்ணங்கள் மனதுக்குள் மோதிக்கொண்டிருக்க, என்னையும் அறியாமலே, விழுந்து கிடந்த சோபாவிலேயே உறங்கிப் போனேன்.

காலையில் எழுந்து குளித்து முடித்து வெளியே வந்தபோது, மனதும் கொஞ்சம் தெளிவாக இருந்தது. நேற்று இரவு என் கணவர் மீது இருந்த கோபம் வெகுவாக குறைந்திருந்தது. அவர் பேசியதில் இருந்த நியாயத்தையே என் மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது. Mulai Kaambu Tamil Hot Sex Stories

– தொடரும்

மாங்கல்யம் தந்துனானே – 18

What did you think of this story??

Comments

Scroll To Top